வன்னிப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தை விட இந்தியாவுக்கே அதிக குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு வலயங்கள் எதற்கு என்ற ஒரு கேள்வியை வெளிப்படையாக எழுப்பியிருக்கின்றார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
அரசியல் விடயங்கள், அணி சேரல்கள், கட்சிமாறல்கள் போன்றவை போகின்ற போக்கைப் பார்த்தால் பெரும்பாலும் இலங்கை எதிர்கொள்கின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்ற கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கப் போகின்றது என எண்ணத் தோன்றுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி இரு பிரதான வேட் பாளர்களின் தரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது.
மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு போல காரியத்தைக் கனகச்சிதமாக நகர்த்துகின்றது இலங்கை... இந்திய, சீன விவகாரங்களில்.
சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டது என்று அரசு அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் தோன்றி உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.
தமிழர் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதா...? அல்லது தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்துவதா...? அத்தோடு - முதலாவது வாக்கைத் தமது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை பேய்க்கோ அல்லது பிசாசுக்கோ அளிப்பதா...?
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் சிரசு போன்றது யாழ் குடாநாடு என்றால், அதன் மூளை போன்றது வலிகாமம். அதிலும் வலிகாமம் வடக்கு, யாழ்.குடாநாட்டு மக்களின் பிரதான பிரதேசம்.
சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது.
இன்னும் ஒன்பது வார காலத்தில் நடைபெறப் போகின்ற இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இரா ணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா களம் இறங் குவார் என்பது உறுதியாகிவிட்டது. இதை அவரே நேற்றுப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >> |