இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கான வீசா விண்ணப்ப அலுவலகம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரவுண் வீதி இலக்கம் 89 என்ற முகவரியில் இந்த காரியாலயத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா திறந்து வைத்தார்.
வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லம் சிங்கள இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கண்டனம்.
இனப்பிரச்சினைக்கு வேகமானதும் விரைவானதுமான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள்குடியமர்த்துதல் போன்ற வற்றுக்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்வுக்கும் மன்மோகன் சிங்குக்குமிடையில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பரவலாக்கல் குறித்து இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்ட யுவதி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்று நடிகர் அபிதாப்பச்சனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவசர தந்தி அனுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |