கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவமொன்றில் குடும்ப உறவுகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்ததுடன், 44வயதான ஒருவர் சுவிஸ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இராணுவத்தினரால் தடுத்துவைக்கப் பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கான உணவு மற்றும் காற்றோட்ட வசதிகளைத் தடுப்பதன் மூலம் அரசு அவர் இயற்கை மரணம் எய்தும் சூழ்நிலையை உருவாக்குகிறது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
வன்னியில் போர் நடைபெறும் போதும், போர் நடக்கும் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருமலைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டபோதும் கூட்டமைப்பின் தலைவர் எங்கு நின்றார்?
பொதுத்தேர்தல் தொடர்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்கள் செட்டிகுளம் நிவாரண கிராமத்திற்கு வேட்பாளர்கள் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வன்னியின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தாம் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் கஜேந்திரன்.எம்.பி.
தமிழீழம் என்பது எமது தாயகத்தின் பெயர். அதற்குத் தனிநாடென்பது அர்த்தமல்ல. தனித்தமிழீழம் என்பதுதான் தனிநாடாகும். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.கே. சிவஞானம்.
அரசியல்ரீதியாக நாம் எந்த தவறும்விட்டதில்லை, இனிமேலும் விடப்போவதில்லை என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கூறியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அணி சேரா நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பில் பிரித்தானியா தனது கவலையை வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த ஈழ இராச்சியமொன்றை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |