தமிழர்களுடைய திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியா நகரில் இன்று புதன்கிழமை வர்த்தகம் களைகட்டியிருந்தது. பொங்கல் பானை, மற்றும் கரும்பு இஞ்சி பழவகைகள் பெரும் விற்பனை நடைபெற்றது.
சனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வன்னியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வவுனியாவிலும் செட்டிகுளத்திலும் மிகப்பெரியதொரு இரண்டு பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அனுமதியின்றி உள்நுழையவே முடியாது என படைத்தரப்பு தம்மிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழ் மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன.
சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. இரா.சம்பந்தன்
பாதாள உலகத் தலைவர்கள் பர்துகாப்புத் தரப்பினரால் கொலை செய்யப்படும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்ட போது நாட்டிலிருந்து தப்பிச் சென்ற லால் பீரிஸை, ஜனாதிபதி இலங்கைக்குத் திரும்புமாறு அழைப்பு.
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.
சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் பல ஆயிரம் பேரை தாம் விடுதலை செய்யப்போவதில்லை என சிறீலங்கா அரசின் எரிபொருள் சக்தி துறை அமைச்சர் டபிள்யூ டி ஜே செனிவரட்னா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் பாதுகாப்பு வலய பிரகடனங்களை விலக்குதல், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் உட்பட எந்தவித முடிபுகளையும் அறிவிக்கவில்லை.
வவுனியாவிற்கு இன்று மாலை ஞாயிறு விஜயம் செய்த இலங்கையில் உள்ள வத்திக்கான் பிரதிநிதி மேற்ராணியார் யோசப்பு ஸ்பிரெறி ஆண்டகைக்கு இறம்பைக்குளம் பங்கு மக்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |