eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்!
Mano தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இன்று அறிவித்துள்ளார்.

அவர் இலங்கையின் சமகால அரசியல் நிலைவரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களில் ஒரு சாராரை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.எனவே அரசு ஏனைய தமிழ் கட்சிகளுடனும் கட்டாயம் பேச்சுக்களை நடத்த வேண்டும்.அரசமைப்புத் திருத்தம் குறித்து தமிழ் கூட்டமைப்புடம் மாத்திரமே அரசு பேசி வருகின்றது.

ஏனைய தமிழ்க் கட்சிக்களுடனும் பேசுவதன் மூலமே ஒரு பொருத்தமான தீர்வை அடைய முடியும். இந்த விடயம் சம்பந்தமாக நாம் அரசுடன் தற்போது இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் கட்சிகளான இ.தொ.க,மலையக மக்கள் முன்னணி,தேசிய தொழிலாளர் காங்கிரஸ் போன்றவற்றுடன் பேசி வருகின்றோம்.
Print this article Posted on 25 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |