இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப் பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா வெளிவிகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் சிறிலங்காவுக்கான பயணம், தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தொடர் தாக்குதல்களை தடுக்கும் என்ற நம்பிக்கை, தமிழகத்தில் இருந்த நிலையில், இராமேஸ்வர மீனவர்கள் மீது, கடந்த சனிக்கிழமை, சிறிலங்கா படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல் தமிழகத்தை கோபங்கொள்ள வைத்துள்ளது.
இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது, ஈழத் தமிழர்களை ஏமாற்றும், திசை திருப்பும் நாடகமாகும்.
தஞ்சை அருகே விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, சசிகலாவின் கணவர் நடராஜன் தனக்குச் சொந்தமான நிசான் கார், போர்ட் எண்டவர் கார், சொனாட்டா கார், ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை மேடையிலேயே விற்றார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.
TIPS US! Send SMS or MMS
with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes
Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit:
|