தஞ்சாவூர் ஈழத் தமிழர்களின் வாழ்வின் ஒளி வட்டுக்கோட்டைத் தீர்மானமே என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தஞ்சையில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பின் 7வது ஆண்டு நிறைவு விழாவில் இயற்றப்பட்டது.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டின் போது, மாநாட்டு கொடியை நகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை விழாவில் கலந்து கொள்வதற்கு இலங்கை தமிழர்கள் தமிழகம் வருவதற்கு அரசு உதவ வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா போன்றவர்களை தமிழர்கள் வரவேற்று ஆட்சியில் அமர்த்தி அழகு படுத்தினர். ஆனால் இவர்கள் தமிழுக்காக எதையும் செய்யாமல், தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசினார்.
கொடி ஏற்றும் குமரனாக உலா வருகிறார் வைகோ! ஊர் ஊராக மறுமலர்ச்சி தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இன்னும் பல மாதங்களுக்கு அவரால் தாயகத்தில் தங்க முடியாது.
நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ்.
நேற்று 27-11-09 வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 தமிழர்களை இன்று அதிகாலை காவல் துறை கைது செய்துள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |