தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது.
தமிழ் உணர்வாளர்களும், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பும் அவ்வளவு தூரம் போராட்டம் நடத்தியும் எச்சரிக்கை விடுத்தும் கூட, கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளார் நடிகர் சல்மான்கான்.
நேற்று இரவு டைம்ஸ்நவ் (TimesNow) தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய IIFA விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் (Wizcraft) நிறுவனத்தின் இயக்குனரும் இந்த நிகழ்வின் முக்கிய காரணகர்த்தாவுமான சபாஸ் ஜோசப் தான் இப்படி திமிர்த்தனமாக பேசினார்.
சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை அனைத்து சூப்பர் ஸ்டார்களும் புறக்கணித்துள்ளனர்.
கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி (IIFA) விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க விரும்புவோருக்கு எதிராக போராட்டம் தொடரும்: சீமான்
இலங்கைக் கடற்படையினரால் இதுவரை காலமும் ஒட்டுமொத்தமாக 500 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்: விடுதலை வேங்கைகள்
எனக்கு தமிழர்கள் முக்கியம், தமிழர்களோடு இரண்டறக் கலந்த நான் அவர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வில் பங்கேற்பேன் என எதிர்ப்பார்ப்பது தவறு: மம்முட்டி
மதுரை மாநாட்டில் நான் தவறாக எதையும் பேசவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் அளிப்பேன் என்றுதான் கூறினேன்: முதல்வர் ராமசாமி
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |